மெத்தா விபஸ்ஸனா வழி

மெத்தா விபஸ்ஸனா வழி: மன அமைதி மற்றும் விழிப்புணர்வுக்கான நேரடிப் பாதை

Bhante Vimalaramsi India Journey BhanteD
Bhante Vimalaramsi India Journey BhanteD

திட்டஞ்ச சரஞ் நிசின்னோ வா, சயானோ வா யாவதஸ்ஸ விதமித்தோ, ஏதம் சதிங் அதிட்டெய்ய, பிரம்மமேதம் விஹாரமிதமாஹு.
திட்டிஞ்ச அனுபகம்ம சீலவா, தஸ்ஸனேன சம்பன்னோ, காமேசு வினேய கேதங், ந ஹி ஜாது கப்பசெய்யங் புனரேதீதி

கரணீய மெத்த சுத்தா (பாடல் 9 – 10)

நின்றாலும், நடந்தாலும், அமர்ந்திருந்தாலும் அல்லது படுத்திருந்தாலும், விழித்திருக்கும் வரை ஒருவர் இந்த விழிப்புணர்வை நிலைநிறுத்த வேண்டும்; இதுவே இந்த உலகத்தில் உன்னதமான வாழ்வு [பிரம்மவிஹாரம்] என்று போற்றப்படுகிறது.

தவறான பார்வைகளில் வீழாமல், தூய ஒழுக்கத்துடனும் [சீலம்], ஆழ்ந்த நுண்ணறிவுப் பார்வையுடனும் நிலைபெற்று, புலனின்பப் பற்றுகளை முழுமையாகக் களைந்தவர் ஒருபோதும் மீண்டும் தாயின் கருப்பையில் பிறவி எடுப்பதில்லை [அவர் முழு விடுதலை அடைந்து பிறவிச் சுழற்சியை அறுக்கிறார்].)

மற்ற தியான முறைகள் போல மனதை இறுக்கி ஒரே புள்ளியில் நிலைநிறுத்தாமல், எண்ணங்கள் எழும்போதெல்லாம் தலையிலும் உடலிலும் தோன்றும் நுட்பமான இறுக்கத்தை உணர்ந்து தளர்த்துவதை (Relax) பந்தே அவர்கள் சுத்தங்களின் வழியே கண்டறிந்தார். இது முகத்திலும் மனதிலும் ஒரு மென்மையான புன்னகையையும், அன்பான உணர்வையும் தியானப் பொருளாகப் பயன்படுத்தும் ஒரு தனித்துவமான தியானமாகும்; இங்கு நாம் வாழ்க்கையின் பழைய எண்ணங்களையே தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை, மாறாக அன்பின் உணர்வு (மெத்தா) முதிர்ச்சியடையும் போது, அது மெத்தாவையும் தாண்டி கருணை (கருணா), மற்றவர் நலம் கண்டு மகிழ்தல் (முதிதா), மற்றும் நடுநிலைமை (உபேக்கா) என பிரம்மவிஹாரத்தின் அடுத்தடுத்த நிலைகளுக்கு இயல்பாகவே விரிவடைந்து நம்மை முழுமையான அமைதிக்கும் விடுதலைக்கும் இட்டுச் செல்கிறது.

மனதை ஒரு புள்ளியில் பலவந்தமாக ஒருமுகப்படுத்துவதையோ அல்லது எண்ணங்களை அடக்கிப் போராடுவதையோ முதன்மையாகக் கொள்ளாமல், இதயத்தில் கனிவான அன்பையும் மகிழ்ச்சியையும் உணர்வாக எழுப்பித் தியானிக்கும் உன்னதமான வழியே மெத்தா விபஸ்ஸனா ( Metta Vipassana Way) ஆகும். புத்தரின் மூல சுத்தங்களில் போதிக்கப்பட்ட பிரம்மவிஹாரத்தை (Brahmavihara) அடிப்படையாகக் கொண்டு, பந்தே விமலரம்சி (Bhante Vimalaramsi) அவர்களால் உருவாக்கம் செய்யப்பட்ட TWIM (Tranquil Wisdom Insight Meditation) தியான முறையை மெத்தா இன்சைட் அறக்கட்டளை (MettaInsight Foundation) வழங்கி வருகின்றன.